ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் வழக்கம். பின்னர் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும். நிகழாண்டில் வருவாய்த்துறையினரிடம் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற வேண்டியது அவசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, நிகழாண்டில் ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளில் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.