துறையூர் அருகே பகளவாடியில் சாலையோரம் இருந்த 4 புளியமரங்கள் ஏலத்தில் செவ்வாய்க்கிழமை விற்கப்பட்டன.
துறையூர் - திருச்சி சாலையில் பகளவாடி பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற இடதுபுறம் குறுக்கே உள்ள 4 புளியமரங்களை அகற்றிக் கொள்ள ஏலம் விடப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர் ரூ.1000 செலுத்தி ஏலத்தில் பங்கேற்க முன்பதிவு செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகளவாடியில் நடைபெற்ற ஏலத்தில் ராஜேந்திரன் என்பவர் ரூ. 26800க்கு அதிகபட்சமாக ஏலம் கோரினார். இதைத்தொடர்ந்து அவருக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்களை வெட்டும் அனுமதி வழங்கப்பட்டது.