சாலையோர புளிய மரங்கள்  ஏலத்தில் விற்பனை

துறையூர் அருகே பகளவாடியில் சாலையோரம் இருந்த 4 புளியமரங்கள் ஏலத்தில் செவ்வாய்க்கிழமை விற்கப்பட்டன.

துறையூர் அருகே பகளவாடியில் சாலையோரம் இருந்த 4 புளியமரங்கள் ஏலத்தில் செவ்வாய்க்கிழமை விற்கப்பட்டன.
துறையூர் - திருச்சி சாலையில் பகளவாடி பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற இடதுபுறம் குறுக்கே உள்ள  4 புளியமரங்களை அகற்றிக் கொள்ள ஏலம் விடப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோர்  ரூ.1000 செலுத்தி ஏலத்தில் பங்கேற்க முன்பதிவு செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகளவாடியில் நடைபெற்ற ஏலத்தில் ராஜேந்திரன் என்பவர் ரூ. 26800க்கு அதிகபட்சமாக ஏலம் கோரினார். இதைத்தொடர்ந்து அவருக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்களை வெட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com