ஒக்கரையில் அம்மா திட்ட முகாம்

துறையூர் வட்டத்துக்குள்பட்ட ஒக்கரை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துறையூர் வட்டத்துக்குள்பட்ட ஒக்கரை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் பு. ரவிசங்கர் தலைமை வகித்தார். சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சிவசங்கரன், உப்பிலியபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, அரசின் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றுப் பேசினர். 
பட்டா, சிறு, குறு விவசாயச் சான்று, உழவர் அட்டை, திருமணம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை கேட்டும் 159 பேர் மனு அளித்தனர். இதில் 37 மனுக்கள் மீது உடனடி தீர்வளிக்கப்பட்டது. மற்ற மனுக்கள் உரிய விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. முன்னதாக, வருவாய் ஆய்வாளர் பிரேமா வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மதுபாலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com