அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர்


பேரறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், மாநகர் மாவட்டச் செயலரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ப.குமார் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து கட்சியினர் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர், அண்ணா சிலைக்கு ப.குமார் தலைமையில் அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் என். நல்லுசாமி, கே.கே. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலர் வி. அருள்ஜோதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் வி. பத்மநாபன், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ். தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தலைமையில், அக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியரக சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 2 அமைதி புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன், ஜெ. சீனிவாசன், எம். ராஜசேகரன், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பி. பழனியப்பன், அமைப்புச் செயலர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான கே.என்.நேரு தலைமையில், அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார், மாநகரச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்: கட்சியின் மாவட்டத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்டச் செயலர் மோகன், மண்டலச் செயலர் ஆல்பர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேமுதிக: தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக்கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் டி.வி. கணேஷ் தலைமையில், மாநில மாணவரணிச் செயலர் விஜயகுமார், பகுதி செயலர்கள் நூர்முகமது, கார்த்திகேயன், வெல்டிங் சிவா உள்ளிட்ட கட்சியினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை சார்பில், மாநகர் மாவட்டச்செயலர் ஆர்.சி. கோபி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போக்குவரத்து நெரிசல்: அதிமுக, அமமுக-வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தபோது தொண்டர்கள், வாகனங்கள் பெருக்கத்தால் மாநகரப் பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. சிந்தாமணி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
முசிறியில்...: திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக சார்பில் நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கைகாட்டியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com