கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.


திருச்சி மாவட்டம் முசிறி அருகே தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
முசிறி அருகே திண்ணக்கோணம் மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் வடிவேல் (42). கூலித் தொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவரைத் திருமணம் செய்து 3 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தையும் உள்ளதாம். இந்நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த செப். 10 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வடிவேல் துப்பட்டாவில் தூக்கிட்டுக் கொண்டவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி பின்னர் திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். வடிவேலின் தந்தை பெரியசாமி (74) முசிறி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com