துறையூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலையின் தலைப்பகுதிக்கு மேல் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை இரவு இரட்டை இலை சின்னம் வடிவில் மின்னொளி அலங்காரம் செய்திருந்தனர்.
திமுகவினர் சனிக்கிழமை மாலையிடச் சென்றபோது, மின்அலங்காரத்தை அகற்றக்கோரினர். இதற்கு, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் உருவானது. பாதுகாப்புப் பணியில் இருந்த துறையூர் காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரிடம் பேசினார். தொடர்ந்து, திமுகவினர் மின்னலங்காரத்தின் மீது உதயசூரியன் பதாகையை மறைத்து அண்ணா சிலைக்கு மாலையிட்டனர். அதிமுகவினர் உதயசூரியன் பதாகையை அகற்றிவிட்டு இரட்டை இலை மின் அலங்காரத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.