4 கோட்டங்களில் நாளை இலவச மருத்துவ முகாம்

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும்

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் சனிக்கிழமை (செப்.22) இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
திருவரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 6ஆவது வார்டு பகுதி மக்களுக்காக மேலகொண்டையம்பேட்டை நேரு பள்ளியிலும், கோ.அபிஷேகம் கோட்ட 54ஆவது வார்டு மக்களுக்காக புத்தூர் முத்துராஜா தெருவில் உள்ள சத்துணவு மையத்திலும், அரியமங்கலம்கோட்டம் 27ஆவது வார்டுக்கு சங்கிலியாண்டபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகிலும், பொன்மலை கோட்டம் 37ஆவது வார்டுக்கு செம்பட்டி குடித்தெரு சத்துணவு மையத்திலும் பொதுமருத்துவ முகாம் நடைபெறும். 
காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com