சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(30). இவர், அந்த பகுதியில் சாராயம் கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, ராஜாவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைத்தார்.
இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ராஜாவை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.