தில்லியில் 40 நாள்களாகப் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திட்டக்குடியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மங்களுர் கிழக்கு ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர் தலைமை வகித்தார். நகர தலைவர் முருகன், அமைப்பாளர் பிரபு, ஒன்றிய பொருளர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் சின்னதுரை கோரிக்கைகளை வலியுத்திப் பேசினார். மாநில மாணவரணி தலைவர் ரவிபிரகாஷ், மாநில நிர்வாகி தமிழரசன், மாவட்ட மகளிரணி செயலர் ஜெயாகலியமூர்த்தி, மாவட்ட தலைவர் கற்பகம் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக நகரச் செயலர் சீனிவாசன் வரவேற்றார்.