விஏஓ தேர்வுக்கு இலவச பயிற்சி

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் விஏஓ போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்குகிறது.

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் விஏஓ போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்குகிறது.
 இதுகுறித்து மாவட்ட நூலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
 கடலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
 இந்த மையத்தில், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிட போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
 பயிற்சி வகுப்பு சனிக்கிழமை ( ஆக.12) தொடங்கி அனைத்து வாரங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. எனவே, போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com