ஆகஸ்ட்15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதை கடைகளின் மேலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
 மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல்கள், பார்கள் ஆகிய இடங்களிலும் மது விற்பனை செய்யாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, கடைகளை திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர்கள், பார் உரிமையாளர்கள் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அதில் எச்சரித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com