ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலோசனை

என்எல்சி சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி சுரங்கம் 1-ஏ ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகரச் செயலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் எம்.சேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். வீடு-நிலம் வழங்கியோர் சங்க பொதுச் செயலர் பூவராகவன், ஏஐடியூசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், பணி நாள்கள் குறைப்புக்கு எதிரான போராட்டத்தின்போது என்எல்சிஅதிகாரிகளை சிறைபிடித்ததாகக் கூறி 3 பேருக்கு பணி மறுக்கப்பட்டது, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டது குறித்து கலந்துரையாடினர். பின்னர், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது, 16-ஆம் தேதி கடலூருக்கு வருகை தரும் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com