ஓய்வூதியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

கடலூர் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் ஆண்டுத் தேர்தல் பேரவை கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் ஆண்டுத் தேர்தல் பேரவை கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்டச் செயலர் சேது விவேகானந்தன் தேர்தல் ஆணையாளராகவும், பொருளாளர் அரங்க.கோவிந்தராசு துணை ஆணையாளராகவும், மாநில துணைத் தலைவர் ராமு.சிதம்பரம் தேர்தல் பார்வையாளராகவும் செயல்பட்டனர்.
 இதில் மாவட்ட கிளைத் தலைவராக ச.சிவராமன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலராக சி.ராமசாமி, பொருளாளராக சி.பக்கிரி, துணைத் தலைவராக டி.விவேகானந்தன், துணைச் செயலராக ஆர்.தீனதயாளன், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஆ.பன்னீர்செல்வம், டி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com