கடலூர்
திருமாவளவன் பிறந்த நாள் விழா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா, கொடியேற்று விழா கடலூர் செல்லங்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா, கொடியேற்று விழா கடலூர் செல்லங்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணை அமைப்பாளர் மோ. தாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ந.கரிகாலன், பு.ராஜா, ம.சுமன், சக்திவேல், விஜயன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சொக்கு, த.ஸ்ரீதர், மொ.வீ.சக்திவேல், பா.ரா.முரளி, மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகர நிர்வாகிகள் கோபால், பீம்சீங், சசிதரன், சலிம், அறிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நகரச் செயலர் சேதுராமன் வரவேற்றார்.