அம்பேத்கர் நினைவு தினம்

அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தில் உள்ள கடலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அவரது உருவப் படத்துக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தில் உள்ள கடலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் அவரது உருவப் படத்துக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
 சங்கத் தலைவர் வி.லோகநாதன் தலைமையில் வழக்குரைஞர்கள் மரியாதை செலுத்தினர். இதில், சங்கச் செயலர் வெங்கடேசன், துணைத் தலைவர் சிவகுருநாதன், துணைச் செயலர் சங்கர், மூத்த வழக்குரைஞர்கள் தமிழரசன், ஜெயபால், காத்தவராயன், அந்தோணிசாமி சுந்தரம், வழக்குரைஞர்கள் இல.திருமேனி, புருஷோத்தமன், கனகராஜ், அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் தென்.சிவக்குமார், கே.சேகர், முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திட்டக்குடி: திட்டக்குடி அருகே உள்ள பட்டூரில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பெ.கருப்புசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலர் கெüதமன், ஒன்றியச் செயலர் ஜான்செங்குட்டுவன், மகளிரணி மாநில துணைச் செயலர் க.சரசுவதி, மாவட்ட அமைப்பாளர் கா.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com