கண்கள் தானம்

பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
 பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஏ. மணி (68). இவர், உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தார். இவரது கண்களை உறவினர்களின் ஒப்புதலோடு பண்ருட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், தானமாகப் பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
 தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com