சிதம்பரம் புதுச்தெரு வேதபாராயண மடத்தில் சிதம்பரேஸ சத்சங்க ஆண்டு விழா, பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நடராஜர் கோயில் செயலர் எஸ்.ராஜகணபதி தீட்சிதர் தலைமை வகித்தார். டி.செல்வரத்தின தீட்சிதர் வரவேற்றார். சங்க அமைப்பாளர் எம்.கிருஷ்ணசாமி தீட்சிதர் சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினார். சிதம்பரம் மௌனகுரு மடாலய அதிபர் மௌன குரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். எஸ்.ஆதிமூலம் வாழ்த்துரையாற்றினார்.
விழாவில் சிவபுராண போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வேதத்தில் தேர்ச்சி பெற்ற வித்யார்த்திகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிதம்பரம் அரசு பள்ளியில் பயின்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சி.முட்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் டி.எம்.தியாகப்பா தீட்சிதர், சுரேஷ், சரவணன், கல்யாணராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதர் நன்றி கூறினார்.