உறவினரை கொலை செய்த இளைஞர் போலீஸில் சரண்

மது போதையில் உறவினரை உலக்கையால் அடித்துக் கொலை செய்த இளைஞர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

மது போதையில் உறவினரை உலக்கையால் அடித்துக் கொலை செய்த இளைஞர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
 கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்.
 இவர்கள் இருவரும் உறவினர்களாம். திங்கள்கிழமை பாஸ்கர் வீட்டில் இருவரும் மது அருந்தி உள்ளனர்.
 அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதனால், ஆத்திரம் அடைந்த பாஸ்கர் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ராதாகிருஷ்ணன் தலையில் அடித்ததில் அவர் நிகழ்டத்திலேயே இறந்தார்.
 இதனால், அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் இறந்த ராதாகிருஷ்ணன் உடலை அருகில் உள்ள மரவள்ளி தோட்டத்தில் போட்டுவிட்டு, குள்ளஞ்
 சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
 போலீஸார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com