மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.சுப்பராயலுவின் (85) கண்கள் தானம் வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் எம்.பி.யுமான கே.சுப்பராயலு (85) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சீர்காழி நகர தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி பெரியார் செல்வம் ஆகியோர் செய்தனர்.