மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

பெண்ணாடம் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 டிப்பர் லாரிகளை காவல் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 டிப்பர் லாரிகளை காவல் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  
 கடந்த இரு வாரங்களில் வெள்ளாற்றிலிருந்து மணல் கடத்தியது தொடர்பாக 8 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com