பண்ருட்டி வட்டாரத்தில் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த குழந்தைகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, சேமக்கோட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் க.மனோசித்ரா, அங்கன்வாடியில் முன்பருவக் கல்வி பயின்ற குழந்தைகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.