கடலூர் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் ரோல்பால் போட்டி கடலூரில் தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ரோல்பால் விளையாட்டுச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு சங்கத் தலைவர் கோ.ராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ம.ராஜா போட்டியை தொடக்கி வைத்தார். இதில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 125 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
போட்டிகள் 11 வயது, 14, 17 வயதுக்குள்பட்டவர்கள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் சிறப்பாக விளையாடியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்கள் வருகிற 24,
25-ஆம் தேதிகளில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும் என சங்கத்தின் செயலர் எல்.சந்திரமோகன்பால்ராஜ் தெரிவித்தார்.