மது விற்பனை: இருவர் கைது

மது விற்பனை தொடர்பாக போலீஸார் இருவரைக் கைது செய்தனர்.

மது விற்பனை தொடர்பாக போலீஸார் இருவரைக் கைது செய்தனர்.
 திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் திங்கள்கிழமை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
 அப்போது திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (57) என்பவர் உரிய அனுமதியில்லாமல் மது பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
 இதனையடுத்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை கைப்பற்றியதோடு அவரை கைது செய்தார்.
 இதேபோல ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி கொட்டாரம் பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக அதேபகுதியைச் சேர்ந்த சோமநாதன் (45) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை கைப்பற்றினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com