ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
 கடலூர் மாவட்ட விவசாயப் பிரிவு சார்பில், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானம், பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
 மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் டி.ராமராஜ், நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்தி, கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் என்.குமார் நன்றி கூறினார்.
 சிதம்பரம்: கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47-ஆவது பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.என்.விஜயசுந்தரம் மாலை அணிவித்தார்.
 காந்தி சிலைக்கு முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமான் மாலை அணிவித்தார். காமராஜர் சிலைக்கு மாநில துணைத் தலைவர் எம்.செந்தில்குமார் மாலை அணிவித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் தவிர்த்தாம்பட்டு விஸ்வநாதன், ஆசிரியர் சி.எஸ்.பாலசுந்தரம், டி.கே.எம்.வினோபா, ஜெகநாதன், அன்பழகன், ஆறுமுகம், வட்டாரத் தலைவர்கள் மனுநீதி செல்வன், புவனேஷ், தமிழரசன், கார்த்திகேயன், சேதுமாதவன், கிள்ளை நகரத் தலைவர் ஜவகர், மாவட்ட நிர்வாகிகள் சுதாகர், ஆர்.எஸ்.ஞானம், பள்ளிப்படை ரவி, சந்திரசேகரன், கஜேந்திரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அழகர்ராஜா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com