கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 25 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி அனிசா உசேன் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, கடலூர் புதுநகர் ஆய்வாளர் ரவிச்சந்திரன் திட்டக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பாதிரிபுலியூர் ஆய்வாளர் சரவணன் கடலூர் புதுநகருக்கும், பரங்கிப்பேட்டை உதயகுமார் திருப்பாதிரிபுலியூருக்கும், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த குமாரபாலன் வளத்திக்கும், திட்டக்குடி சுதாகர் ராமநத்தத்துக்கும், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பீர்பாட்ஷா ஸ்ரீமுஷ்ணத்துக்கும், புவனகிரி இளவரசன் சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கடலூர் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் மணி சமூக நீதித்துறைக்கும், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம், பண்ருட்டிக்கும், பண்ருட்டி ஆய்வாளர் தாமரைச்செல்வி விருத்தாசலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் ஆய்வாளர் செல்வம் பரங்கிப்பேட்டைக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் குமரய்யா காடாம்புலியூருக்கும், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி சிதம்பரத்துக்கும், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா விழுப்புரத்துக்கும், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா காத்திருப்புப் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி திருக்கோவிலூருக்கும், திருவண்ணைநல்லூர் ஆய்வாளர் சாகுல் ஹமீது உளுந்தூர்பேட்டைக்கும், திருக்கோவிலூர் ஆய்வாளர் கோடிராஜ் ரோசனைக்கும், கண்டமங்கலம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செஞ்சிக்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூர்த்தி தியாகதுருகத்துக்கும், திண்டிவனம் ராதாகிருஷ்ணன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், ராமநத்தம் ஆய்வாளர் ராஜாராம் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், வளவனூர் ஆய்வாளர் முருகன் கிளியனூர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.