விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க தவாக வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியது.குமராட்சியில் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அண்மையில்

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியது.
குமராட்சியில் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஒன்றிய இளைஞரணிச் செயலர் சுகுமார் வரவேற்றார். ஒன்றியச் செயலர் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன் தலைமை வகித்துப் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றியத் தலைவர் சுந்தரமூர்த்தி, துணைச் செயலர் அறிவழகன், நிர்வாகிகள் பிரபு, தமிழ், சபரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைச் செயலர் உத்திராபதி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: கட்சியில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்து கிளையில்கொடி ஏற்றுவது, தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக 2016 - 17- ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிதம்பரம் -  காட்டுமன்னார்கோவில் சாலையில் பழுதாகியுள்ள இளநாங்கூர் மற்றும் குமராட்சி கான்சாகிப் வாய்க்கால் பாலத்தின் மீது கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது, குமராட்சியில் மாணவர் விடுதி அருகே உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும், விவசாயிகளின் நலன் கருதி வீராணம் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்காலை வெட்டி தடுப்புக்கட்டை அமைத்துத் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com