ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
 விருத்தாசலத்தை அடுத்த எம்.பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய்காந்தி மனைவி மங்கையர்க்கரசி (35). இவர், புதன்கிழமை மங்கலம்பேட்டை சென்றுவிட்டு, வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோவை அதே ஊரைச் சேர்ந்த ராஜவேல் மகன் இளையராஜா (28) ஓட்டி வந்தார். கர்நத்தம் சுடுகாடு அருகே வந்தபோது, ஆட்டோவில் இருந்து மங்கையர்க்கரசி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com