jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

சிறுவத்தூர் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை, குடிநீர்த் தொட்டி திறப்பு

By நெய்வேலி,  |   Published on : 19th May 2017 08:03 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சிறுவத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம், குடிநீர்த் தொட்டி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ், பண்ருட்டி ஒன்றியம், சிறுவத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.32 லட்சம் செலவில் 4 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ரூ.6 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். மேலும், இந்தத் தொட்டியை தொடர்ந்து பராமரித்திட வேண்டும் என பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வசந்தாவிடம் கேட்டுக்கொண்டார்.
 பின்னர், விக்ரமன் பேசுகையில், கடந்த நிதியாண்டில்
 என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளுக்காக ரூ.38 கோடியை செலவிட்டுள்ளது. நிகழ்வாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1,200 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டன என்றார்.
 பின்பு, கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றையும் ஆர்.விக்ரமன் பார்வையிட்டார்.
 விழாவில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன், என்எல்சி சமூகப் பொறுப்புணர்வுத் துறையின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் ஜே.பீட்டர் ஜேம்ஸ், பள்ளி தலைமையாசிரியை எம்.உமா, ஆசிரியர் ராஜ்குமார், சிறுவத்தூர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்