கடலூர் அஞ்சல் கோட்டத்தில் மொத்தமுள்ள 290 கிராமப்புற கிளை அஞ்சலகங்களில் காலியாக உள்ள 26 கிராமப்புற அஞ்சல் தலைவருக்கான பணியிடங்கள், 11 கிராமப்புற அஞ்சல் தலைவர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை இணையம் (ஆன்-லைன்) மூலமாக அனுப்புவதற்கான காலக்கெடு மே 24-ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடு ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கடலூர் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.