ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு 22-இல் தொடக்கம்

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவ.மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளாக நடைபெறுகிறது.  அதன்படி 22-ஆம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், ஒன்றியத்துக்குள் பொது மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
 23-ஆம் தேதி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்குள் பொதுமாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
 26-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
29, 30 ஆகிய தேதிகளில் இடைநிலை ஆசிரியருக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com