சிதம்பரம் அருகே குமராட்சியில் கடை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
குமராட்சி கடை வீதியில் பாண்டிதுரை என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடை உள்ள இடத்தின் உரிமையாளர்கள் மனோகர், சிவசங்கரன், ஸ்ரீதரன், மாலதி ஆகியோருக்கு இடையே பாகப் பிரிவினை மற்றும் கடை வாடகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலதி என்பவர், பாண்டிதுரையின் கடையை சேதபடுத்தியும், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.