பத்தாம் வகுப்பு தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளி சார்பில் தேர்வெழுதிய 214 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்கள்: ந.ஆகர்ஷணா-498, ஏ.ஜி.ஐஸ்வர்யா-496, எஸ்.தயாநிதி மற்றும் டி.எஸ்.கௌதம் -494 மதிப்பெண்கள் பெற்றனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும் பெற்றனர். கணிதத்தில் 13 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக அறிவியலில் 43 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார், பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி, துணை முதல்வர் டி.லட்சுமணன் ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.