ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் நவ.21-ஆம் தேதி நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் நவ.21-ஆம் தேதி நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு அருங்காட்சியகம் சார்பில் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வரும் 21-ஆம் தேதி அரசு மருத்துவமனை சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
 3, 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரோஜா மலர்கள், 5, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜவாஹர்லால் நேரு, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாரத மாதா ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்போர் ஓவியம் வரைவதற்கான பொருள்களை எடுத்து வர வேண்டும்.
 ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 96593 31577 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com