வீட்டு ஓடுகளை சீரமைத்தபோது, தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (52). கூலித் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் ஓடுகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மேலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமுற்றவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.