உடல் தானம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த எஸ்.பேச்சிமுத்து (80) காலமானார்.

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த எஸ்.பேச்சிமுத்து (80) காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், சின்னசேலம் அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. 
உடல் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் சிங்கராசு, சின்னசேலம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயபால், ரகுராஜன், ஏகாம்பரம், கண்தான மாவட்டத் தலைவர் தங்கராசு, சிறுபாக்கம் ஜோதிசுவாமி இளம் துறவி அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் 
செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com