கடலூரில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், உலக மீனவர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இளைஞர் பேரவை மாவட்டத் தலைவர் கோகிலன், மாவட்ட இணைச் செயலர் பழனிவேல், நகரச் செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து, சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தனர் (படம்). மாவட்ட நிர்வாகிகள் வீரமுத்து, ராஜேந்திரன், காரைச்செல்வம், ஆனந்தகுமார், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.