தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக்குழு கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்தார். கிளையின் பொதுச் செயலர் பரகாலராமானுஜம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் நாராயணன் பங்கேற்றார்.
கூட்டத்தில் 80 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகள் கெüரவிக்கப்பட்டனர். அதன்படி, நாகராஜசாஸ்திரி, அருணாசல சிவாச்சாரியார், மருத்துவர் கிருஷ்ணகோபாலன், சேஷாத்திரி, சாரங்கபாணி, வீரராகவன், என்.ஆர்.சத்தியமூர்த்தி, சீனுவாச நாராயணன், பார்த்தசாரதி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சாவடி கிளைத் தலைவர் வரதராஜன், நிர்வாகிகள் கோதண்டராமன், சகுந்தலா, சீனுவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை பொருளாளர் சக்கரபாணி நன்றி கூறினார்.