வடலூரில் நாளை முப்பெரும் விழா : தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா, நூல் வெளியீட்டு விழா, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை

கடலூர் மாவட்டம், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா, நூல் வெளியீட்டு விழா, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை (அக்.2) காலை நடைபெறுகிறது.
வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நா.மகாலிங்கம் கலையரங்கில் நடைபெறும் இந்த விழாவில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக, மகாத்மா காந்தி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் பொதுவாழ்வு குறித்து திருவெண்காடு ஜெய.ராஜமூர்த்தி எழுதிய, 'குறள்வழியில் அருட்செல்வர்' என்ற நூல் வெளியிடப்படுகிறது. சுத்த சன்மார்க்க நிலையச் செயலர் ரா.செல்வராஜ் நூலை வெளியிட, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கே.முருகன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசுகிறார்.
விழாவுக்கு, வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய செயற்குழு உறுப்பினர்கள் கி.இளங்கோவன், ஓ.வி.வெங்கடாஜலபதி, பொருளாளர் பூ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் நூலாசிரியருக்குப் பதிலாக அவரது மனைவி ஹேமலதா ராஜமூர்த்தி பங்கேற்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசனும், ஏற்பாடுகளை வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தினரும் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com