சிறந்த ஆசிரியர், மாணவர்களுக்கு விருது

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வி.ஜெயஸ்ரீ, வி.சாருமதி, ஏ.ஆர்.முகமதுஜாசிம், எஸ்.யோகேஸ்வரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நினைவுப் பரிசும், சிறந்த ஆசிரியை ஜோஸ்பின் தேவகிருபைக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் நினைவுப் பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை குமாரராணி மீனா முத்தையா, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ஆகியோர் வழங்கி கௌவுரவித்தனர்.
 நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் பங்கேற்றார்.
 விருது பெற்ற மாணவர்கள், ஆசிரியை ஆகியோருக்கு, பள்ளிக்குழுச் செயலர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் செவ்வாய்க்கிழமை பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com