கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாஜக தலைவர் அமித் ஷா, அவரது மகன் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.என்.விஜயசுந்தரம் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ப.வள்ளல்பெருமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், தவிர்த்தாம்பட்டு என்.விஸ்வநாதன், கடலூர் வழக்குரைஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகிகள்
ஆர்.எஸ்.ஞானம், எம்.நசீர்அரமககு, இளங்கோவன், எஸ்.ராஜாராமன், ஏ.பாலசுப்பிரமணியன், ஆர்.ஜெகநாதசன், எஸ்.ஆறுமுகம், ஆர்.துரைராஜ்ஸ டி.கே.எம்.வினோபா, சி.செல்வம், பி.திருமாறன், மனுநீதிசெல்வம், கிள்ளை ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். குமராட்சி வட்டாரத் தலைவர் ஆர்.புவனேஷ் நன்றி கூறினார்.