சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த சுமதி (59) அண்மையில் காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க மாவட்டத் தலைவர் ராசி.முருகப்பன், நகரத் தலைவர் ஏ.ராமச்சந்திரன், செயலர் டி.என்.ஆர்.அரவிந்தன், பொருளாளர் பாண்டியன், நிர்வாகிகள் மணிகண்டன், ஜெயம் சங்கர், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்தனர்.