செப்.19-இல் முதுநிலை ஆசிரியர் நியமன கலந்தாய்வு

முதுநிலை ஆசிரியர் பணியிட நியமனத்துக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

முதுநிலை ஆசிரியர் பணியிட நியமனத்துக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.
 எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அன்று காலை 9.30 மணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆணை, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com