பாஜக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ஆதரித்து கடலூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ஆதரித்து கடலூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கட்சியின் மாவட்டத் தலைவர் க.தேவசரவணசுந்தரம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு.சக்திகணபதி சிறப்புரையாற்றினார்.
 நிர்வாகிகள் பொன்னிரவி, குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிக பலன் அடைந்துள்ளதாகவும், கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் பலன் அடைந்துள்ளதால் நீட் தேர்வை தமிழகத்தில் தொடர்ந்து நடத்த வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com