வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டன.

சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டன.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வடஹரிராஜபுரம் கிராமத்தில், பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவர் நாகராஜன் (58). இவரது மனைவி செல்வி (45). கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக தனது மனைவி செல்வியுடன் புவனகிரியில் வசிக்கும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை காலை தனது கிராமத்துக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்து ஒரத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com