சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ஆர்.பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் பி.ஜெயசங்கர், பண்ருட்டி எம்.தேவநாதன், இணைச் செயலர்கள் பரங்கிப்பேட்டை எஸ்.ராஜேந்திரன், திட்டக்குடி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பண்ருட்டி ஆர்.கே.பி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா சிறப்புரையாற்றினார். மாநில முன்னாள் தலைவர் எம்.என்.ராமலிங்கம், துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், துணைத் தலைவர்கள் ப.சண்முகசுந்தரம், எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் மே 12-இல் தஞ்சாவூரில் நடைபெறும் பணிப் பாதுகாப்பு மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது, 41 மாதங்களைப் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். சீருடை சலவைப்படி, விபத்துப்படி ஆகியவை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் டி.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com