பண்ருட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் காமராஜர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் நகரச் செயலர் உத்தராபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் "சிகரம்' செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மாதவன், மூசா, செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரமேஷ்பாபு, கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.