தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக் குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்து, விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். உறுப்பினர் கோதண்டராமன் விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசித்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சாவடி தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, நிர்வாகி ராமன் நன்றி கூறினார்.