ஆவின் பால் விற்பனையகம் மீது தாக்குதல்: இளைஞர் கைது 

வடலூரில் வசிப்பவர் தானப்பன். இவர், நெய்வேலி சாலையில் ஆவின் பால் விற்பனையகம் நடத்தி வருகிறார்.

வடலூரில் வசிப்பவர் தானப்பன். இவர், நெய்வேலி சாலையில் ஆவின் பால் விற்பனையகம் நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு தானப்பனின் மனைவி காசியம்மாள் (50), டீ மாஸ்டர் ஆகியோர் பால் விற்பனையகத்தில் இருந்தனராம். அப்போது, அங்கு வந்த வடலூர், புதுநகரைச் சேர்ந்த மணி மகன் அருள்பாண்டி, தானப்பன் எங்கே எனக் கேட்டு இரும்புத் தடியால் காசியம்மாளை தாக்கினாராம். மேலும், கடையையும் சேதப்படுத்தினாராம். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காசியம்மாள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதுகுறித்து வடலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அருள்பாண்டியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com