தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோயிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, தில்லைக்காளிக்கு


சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோயிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, தில்லைக்காளிக்கு மகாபிஷேகம், 208-ஆவது சிறப்பு அர்த்தசாம பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர்.
ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com