கடலூர் மாவட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், வடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எஸ்.ராமர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை, செயலர் ராஜேந்திரன், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தநர். மாவட்ட துணைத் தலைவர் பூமணி, துணைச் செயலர் அய்யனார், இணைச் செயலர் அன்பழகன், மாநில பிரசார செயலர் ஆர்.சக்திவேல், வி.ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் ஆனந்ததுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். ஒன்றியத் தலைவர்கள், செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.